ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
கபாலி படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்துள்ள படம் ராணி. இதனை சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கி உள்ளார். எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார். தன்ஷிகாவுடன் பேபி வர்ணிகா, பேபி வர்ஷா, சங்கர் ஸ்ரீஹரி உள்பட பலர் நடித்துள்ளனர். ராணி படத்தின் கதை இதுதான்.
திருவண்ணாமலையை சேர்ந்த தன்ஷிகா தன் முறைப்பையனை காதலிக்கிறார். முறைப்பையன் மலேசியாவில் வேலை செய்கிறார். காதலுக்கு குடும்பத்துக்குள் எதிர்ப்பு வரவே தானும் மலேசியாவுக்கு சென்று விடுகிறார். அங்கு காதலரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார். இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் கணவர் காணாமல் போகிறார். கணவரைத் தேடி அலைகிறார் தன்ஷிகா. அந்த தேடலில் பல சிக்கல்களை சந்திக்கிறார். அவரது இரட்டை குழந்தைகளுக்கும் ஆபத்து வருகிறது. தன் கணவனையும் கண்டுபிடித்து குழந்தைகளையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
தன்ஷிகாவின் கேரக்டர் பெயர் ராணி. திருவண்ணாமலையில் இருக்கும்போது கிராமத்து பெண்ணாகவும், மலேசியா சென்றதும் மார்டன் பெண்ணாகவும் மாறிவிடுகிறார். தன்ஷிகாவுக்கு சண்டை காட்சியெல்லாம் இல்லை. எல்லா பிரச்னைகளையும் தன் புத்திசாதுர்யத்தால் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.