ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெற்றியடைந்த படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'.பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் தனது அடுத்த படமான ‛பிகாடே நவாப்' படத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க துடிப்பதாக கூறினார்.
இதைப்பற்றி சஞ்சய் குப்தா கூறியதாவது...." நான் ரொம்ப விரும்பும் ஒரு நடிகர் அது தான் ரன்பீர் கபூர். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. ரன்பீர் என்று மட்டுமே ஒரு கதையை நான் வைத்து இருக்கிறேன், அந்த கதையை இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. இந்த படத்தை நான் இயக்குவேன் என்றால் படத்தின் ஹீரோ ரன்பீர் தான். படத்தின் கதையை நான் அவரை எண்ணியே எழுதினேன். அவரை தவிர யாரையும் அந்த படத்தில் என்னால் நடிக்க வைக்க முடியாது" என்று கூறினார்.