ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெற்றியடைந்த படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'.பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் தனது அடுத்த படமான ‛பிகாடே நவாப்' படத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க துடிப்பதாக கூறினார்.
இதைப்பற்றி சஞ்சய் குப்தா கூறியதாவது...." நான் ரொம்ப விரும்பும் ஒரு நடிகர் அது தான் ரன்பீர் கபூர். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. ரன்பீர் என்று மட்டுமே ஒரு கதையை நான் வைத்து இருக்கிறேன், அந்த கதையை இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. இந்த படத்தை நான் இயக்குவேன் என்றால் படத்தின் ஹீரோ ரன்பீர் தான். படத்தின் கதையை நான் அவரை எண்ணியே எழுதினேன். அவரை தவிர யாரையும் அந்த படத்தில் என்னால் நடிக்க வைக்க முடியாது" என்று கூறினார்.