'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெற்றியடைந்த படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'.பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் தனது அடுத்த படமான ‛பிகாடே நவாப்' படத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க துடிப்பதாக கூறினார்.
இதைப்பற்றி சஞ்சய் குப்தா கூறியதாவது...." நான் ரொம்ப விரும்பும் ஒரு நடிகர் அது தான் ரன்பீர் கபூர். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. ரன்பீர் என்று மட்டுமே ஒரு கதையை நான் வைத்து இருக்கிறேன், அந்த கதையை இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. இந்த படத்தை நான் இயக்குவேன் என்றால் படத்தின் ஹீரோ ரன்பீர் தான். படத்தின் கதையை நான் அவரை எண்ணியே எழுதினேன். அவரை தவிர யாரையும் அந்த படத்தில் என்னால் நடிக்க வைக்க முடியாது" என்று கூறினார்.