ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடக்க போவதாக வெளியாகி வந்த தகவல்கள் குறித்து லுலியா வென்சர் முதல் முறையாக மவுனம் கலைத்து பதிலளித்துள்ளார். ஹிமேஷ் ரேஸ்ஸாமியாவின் சமீபத்திய ஆல்பமான ஆப் சி மவுசிகு என்ற ஆல்பத்தில் எவ்ரி நைட் அன் டே என்ற பாடலை லுலியா பாடி உள்ளார். இந்தியில் தான் முதல் முறையாக பாடிய இந்த பாடலின் வெளியிட்டு விழாவில் லுலியா நேற்று கலந்து கொண்டார். அப்போது, சல்மான் கானுக்கும், அவருக்கும் இடையேயான உறவு பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த லுலியா, சல்மான் மற்றும் என்னை பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மீடியாவும் இதை திரும்ப திரும்ப கூறி கொண்டே இருக்கின்றன. ஆனால் நான் சொல்கிறேன், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. அதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் இந்தியா வருவதற்கு அவர் தான் காரணம். எனக்கு இந்தியா, அதன் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். நான் முதல் முறையாக இந்தியா வந்து விட்டு திரும்பும் போது அழுதேன் என்றார்.