தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் மன்சூரலிகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாத என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் அதைப் பற்றி பணக்காரர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். இந்த அறிவிப்பால் சினிமா தொழில் முடங்கி கிடக்கிறது. தியேட்டரில் வசூல் குறைந்து விட்டது, இதைப் பற்றி பேச சினிமாகார்களுக்கு தைரியம் இல்லை.
அதனால் நான் சொல்கிறேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் பெட்ரோல் பங்கில், மெடிக்கல் ஸ்டோரில், அரசு அலுவகத்தில் செல்லும் என்பதை போல தியேட்டடர்களிலும் பழைய நோட்டுகளை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தால்தான் சினிமா காப்பாற்றப்படும். பணத் தட்டுபாடால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். இதனை சினிமா சங்கங்கள் மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னிடம் கருப்பு பணமும் இல்லை. கணக்கை பக்காவாக வைத்திருக்கிறேன். என்றார் மன்சூரலிகான்.