ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
நடிகர் மன்சூரலிகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாத என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் அதைப் பற்றி பணக்காரர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். இந்த அறிவிப்பால் சினிமா தொழில் முடங்கி கிடக்கிறது. தியேட்டரில் வசூல் குறைந்து விட்டது, இதைப் பற்றி பேச சினிமாகார்களுக்கு தைரியம் இல்லை.
அதனால் நான் சொல்கிறேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் பெட்ரோல் பங்கில், மெடிக்கல் ஸ்டோரில், அரசு அலுவகத்தில் செல்லும் என்பதை போல தியேட்டடர்களிலும் பழைய நோட்டுகளை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தால்தான் சினிமா காப்பாற்றப்படும். பணத் தட்டுபாடால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். இதனை சினிமா சங்கங்கள் மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னிடம் கருப்பு பணமும் இல்லை. கணக்கை பக்காவாக வைத்திருக்கிறேன். என்றார் மன்சூரலிகான்.