வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கவலை வேண்டாம். படத்தின் கதையும், இரண்டை அர்த்த வசனங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜீவா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் இதுவரை 26 படங்களில் நடித்து விட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி பெற்றது, எத்தனை படங்கள் தோல்வி அடைந்தது என்று எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்.
சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை ஒரு நடிகனாக்கியது அமீர். ராம் படத்தில் என்னை நடிகனாக செதுக்கினார். அவர் மதுரைக்காரர் என்பதில் எனக்கு சந்தோஷம், மதுரை மக்களும், மதுரை கறிதோசையும் எனக்கு மிகவும் படிக்கும். மதுரை ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் அந்த படம் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. என்றார் ஜீவா.