ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கவலை வேண்டாம். படத்தின் கதையும், இரண்டை அர்த்த வசனங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜீவா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் இதுவரை 26 படங்களில் நடித்து விட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி பெற்றது, எத்தனை படங்கள் தோல்வி அடைந்தது என்று எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்.
சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை ஒரு நடிகனாக்கியது அமீர். ராம் படத்தில் என்னை நடிகனாக செதுக்கினார். அவர் மதுரைக்காரர் என்பதில் எனக்கு சந்தோஷம், மதுரை மக்களும், மதுரை கறிதோசையும் எனக்கு மிகவும் படிக்கும். மதுரை ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் அந்த படம் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. என்றார் ஜீவா.