ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இவரது உறவினரான நிதின் சவுகான், சிம்லாவின் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதின் சவுகன், சிம்லாவில் தனது காரில், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் காரணம் என நிதின், தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதினும் அவரது மனைவியும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்துள்ளதாக கூறப்படுகிறது.