அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லட்சுமண் இயக்கியுள்ள படம் போகன். ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பிரபுதேவா பேசுகையில்,
பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரித்து நான் நடித்த தேவி படத்தின் ஆடியோ விழாவுக்கு நான் ஒரு ஆக்டராக மட்டும்தான் வந்தேன். ஆனால் இந்த போகன் பட விழாவுக்கு தயாரிப்பாளராக வந்திருக்கிறேன். புருடியூசராக மேடையில் பேசுவது எனக்கு புதுசாக உள்ளது. இந்த படத்தை பார்த்தேன். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. உடனே ஜெயம்ரவிக்கு போன் செய்து சூப்பர் என்றேன். அவ்ளோ நன்றாக நடித்திருந்தார். மேலும், டைரக்டர் லட்சுமணை முன்பே தெரியும். ஆனால் அவர் இவ்ளோ புத்திசாலி என்று தெரியாது. படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் பட்ஜெட்டைதான் கொஞ்சம் அதிகப்படுத்தி விட்டார். ஆனாலும் நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம் என்றால் படம் நன்றாக வந்திருப்பதுதான் காரணம். அந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
ஹன்சிகாவை நான் இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் ஜெயம்ரவியுடன் நடிக்க வைத்தேன். இந்த படத்தில் அவர் நடித்த காட்சிகளைப்பார்த்து சிரித்துக்கொண்டேயிருந்தேன். கலக்கியிருக்கிறார். சூப்பர் சூப்பர் என்று சொன்னேன். அடுத்து, அரவிந்த்சாமி சார். மின்சார கனவு படத்தில் அவருடன் இணைந்து நடித்தபோது, பார்த்தால் ஹாய் என்று மட்டும்தான் சொல்வேன். அவரும் அப்படித்தான் இருந்தார். ஆனால் இந்த படத்தில் பலமுறை சந்தித்து பேசி ப்ரண்டாகி விட்டோம். நான் அவர் வீட்டுக்கு போனேன். அவர் எங்க வீட்டுக்கு வந்தார். அப்படியொரு சூழ்நிலையை இந்த போகன் படம் அமைத்துக் கொடுத்தது.
மேலும், இந்த போகன் படத்தைப்பொறுத்தவரை ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா ஆகிய மூன்று பேரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அதிலும் ஜெயம்ரவியின் நடிப்பை பார்த்தபோது ஒரு குட்டி கமல் மாதிரி நடித்துள்ளார். ஒன்றுமே தெரியாதவர் மாதிரி தெரிவார். ஆனால் அவருக்கு எல்லாம் தெரியும்.ஒவ்வொரு விசயத்தையும் நன்றாக உன்னிப்பாக கவனித்து நடிப்பார். அதனால் தான் இந்த படத்தில் ரவி இருக்கிறார் என்றதும் நான் மகிழ்ச்சியாகி விட்டேன். படமும் சிறப்பாக வந்திருப்பதோடு இப்போதே விற்பனையாகி விட்டது. விஜய் நடித்துள்ள பைரவா படத்தை வாங்கியுள்ள நிறுவனமே போகன் படத்தையும் வாங்கியிருக்கிறார்கள் என்றார்.
ஜெயம்ரவி பேசும்போது,
போகன் எனக்கு ரொம்ப முக்கியமான படம். இந்த மாதிரி படங்கள் எப்போதாவதுதான் கிடைக்கும். இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் என் மீதும், டைரக்டர் மீதும் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அது எங்க ளுக்கு பெரிய பாரமாதான் இருந்தது. அதனால் பயத்துடனேயே ஒர்க் பண்ணினோம். ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் என்னிடம் லட்சுமண் கதை சொல்ல வந்தபோது, வேறு யாராவது என்னை விட பெரிய நடிகரை வைத்து படம் பண்ணுங்கள். உடனே நாம் இணைய வேண்டாமே என்றேன். ஆனால் அவர், நாமளோ இந்த படத்தையும் பண்ணுவோமே என்றார். அப்படித்தான் இந்த படம் உருவானது. அதோடு எனக்கு ரொம்ப நாளைக்குப்பிறகு ரோமியோ ஜுலியட் என்ற சக்சஸ் கொடுத்தவர் லட்சுமண். தனிஒருவனும் வெற்றிதான் என்றாலும், அதற்கு முன்பே ரோமியோ ஜூலியட்தான் வெற்றியை கொடுத்தது.
இந்த போகன் படத்தை நான் ஏன் முக்கியமான படம் என்று சொல்கிறேன் என்றால், இதுவரை செய்யாத ஒரு விசயத்தை செய்திருக்கிறேன். அந்த விச யத்தை சொன்னால் கதை தெரிந்து விடும். அதனால்தான் இப்போது சொல்ல முடியவில்லை. மேலும், லட்சுமண் இது நாலாவது, ஐந்தாவதாக பண்ண வேண்டிய படம். ஆனால் துணிச்சலாக இரண்டாவது படமாகவே பண்ணியிருக்கிறார். பிரதமான மேக்கிங் கொடுத்துள்ளார்.
ஹன்சிகாவுடன் எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட்டுக்குப்பிறகு நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. மற்ற படங்களைப்போன்று இந்த படத்திலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அரவிந்த்சாமி சாரைப்பற்றி சொல்ல வேண்டு மென்றால், தனி ஒருவனைத் தொடர்ந்து உடனே இணைந்து நடிக்க வேண்டும் என்றதும், இப்போது வேண்டாமே என்றார். முதலில் கதையே கேளுங்க பிடிச்சா நடிங்க என்றோம். கதையை கேட்டவர் ஒத்துக்கொண்டார். ஆக, ஒரு அழகான டீம் உருவாகியது. இந்த படம் மிகப்பெரிய சக்சஸ் ஆகும் என்று நம்புகிறேன் என்றார்.