டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் செல்வராகவன் இரண்டாம் உலகம் தோல்விக்கு பிறகு படம் இயக்காமல் இருந்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு அவர் விக்ரம் நடிப்பில் சிந்துபாத் என்ற படத்தை தொடங்கினார். இந்தப் படத்தை போக்கிரி, நம்நாடு, ராமச்சந்திரா, பரமசிவன் படங்களை தயாரித்த ஸ்ரீகனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்தார்.
ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் செல்வராகவனுக்கும், விக்ரமிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட படம் டிராப் ஆனது. இதில் தயாரிப்பாளர் ரமேஷ்பாபுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இயக்குனர் செல்வராகவனுக்கு சம்பள முன்பணமாக ஒரு கோடி கொடுத்திருந்தார். படம் டிராப் ஆனதால் அந்த முன்பணத்தை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு திருப்பிக் கேட்டார். அதற்கு செல்வராகவன் எந்த பதிலும் தரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் ரமேஷ்பாபு செல்வராகவன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தனது ஒரு கோடி ரூபாயை செல்வராககனிடமிருந்து வாங்கித் தருமாறு புகார் அளித்துள்ளார்.