சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
அடையாறு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஒளிப்பதிவாளருக்கு படித்து விட்டு ராஜீவ் மேனின் உதவியாளராக இருந்த நரேன், நிழல்கூத்து என்ற மலையாளப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதிலிருந்து நடிப்பு ஆர்வம் அதிகமாக 4 தி பீப்பிள், பை த பீப்பிள், கிளாஸ் மேட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சித்திரம் பேசுதடி தமிழ் படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு அஞ்சாதே படம் அவரை பிரபலமாக்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்க வேண்டியவர் திடீரென்று ஆக்ஷன் ஹீரோவாக முடிவு செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரையில் ஆக்ஷன் ஹீரோவானார். அதன்பிறகு பள்ளிக்கூடம், தம்பிக்கோட்டை, படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு உதவவில்லை. முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார் அதுவும் ஓடவில்லை. அதன் பிறகு மலையாளப் படங்களில் நடிக்கச் சென்று விட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு கத்துக்குட்டி படத்தில் நடித்தார். அது ஒரளவுக்கு அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியை கொடுத்தது.
தற்போது ரம் படத்தில் நடித்து வருகிறார். இதில் நரேன் ஹீரோ இல்லை. அனிருத்தின் கசின் பிரதர் ரிஷிகேஸ்தான் ஹீரோ, நரேன் இரண்டாவது ஹீரோ. மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்திருக்கிறார் நரேன். ரம் படத்திலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்குவாரா? ரம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.