ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தணிக்கை செய்யப்பட்டும் 400 படங்கள் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். அவரது மகன் லுத்புதீன் ஹீரோவா நடித்துள்ள பறந்து செல்லவா படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் நாசர் பேசியதாவது:
கலைத்துறையில் கால் நூற்றாண்டை கடந்தவன் நான். திரைத்துறை எப்படி வளர்ந்தது, எப்படி பாதிக்கப்பட்டது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற அனைத்தும் எனக்கும் தெரியும். அந்த வகையில் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் 4 படங்களை தயாரித்தவன். அதில் நிறைய இழந்தவன். இப்போது படம் எடுப்பது சிரமமே இல்லை 10 லட்சத்திலும் படம் எடுக்கலாம், 100 கோடியிலும் படம் எடுக்கலாம். ஆனால் அதை வெளியிடுவதுதான் இன்றைக்குள்ள பெரும் பிரச்சினை. எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் தயாராகி, தணிக்கை செய்யப்பட்ட சுமார் 400 படங்கள் வெளிவரமுடியால் முடங்கிக் கிடக்கிறது. சிறிய படங்களுக்கு தாணு போன்ற தயாரிப்பாளர்களை கை கொடுப்பதுதான் இன்றைக்கு இருக்கிற ஒரே ஆறுதலான விஷயம். என்றார் நாசர்.