பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முன்பெல்லாம் ஹீரோக்களின் சம்பளம் மட்டும்தான் கோடி கணக்கில் இருக்கும். அதன் பிறகு நயன்தாரா, அனுஷ்கான மாதிரியான நடிகைகள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் இயக்குனர்களும் கோடி கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த சில ஆண்டுகள் வரை ஒரு நடிகர் ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் அந்தப் படத்தின் இயக்குனருக்கு 10 லட்சத்துக்குள்தான் சம்பளம் இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறு. ஹீரோக்களுக்கு நிகராகவும், அவர்களை விடவும் அதிகமாக சம்பளம் கேட்கிறார்கள். இதை தொடங்கி வைத்தவர் ஷங்கர். கோடியில் சம்பளம் வாங்கிய முதல் இயக்குனர் அவர்தான். இப்போதைக்கு டாப்பில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 50 கோடி சம்பளம் லாபத்தில் பங்கு என்பதுதான் அவரது டீலிங். அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் கோடிக்குள் வந்தார், இன்றைய நிலவரப்படி பிரபு தேவா, அட்லி, ஹரி, ஏ.எல்,விஜய், மோகன் ராஜா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கோடியில் சம்பளம் வாங்குகிறார்கள்.
2.ஓ படத்துக்கு ஷங்கருக்கு 20 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்துக்கு அட்லிக்கு 13 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. சிங்கம் 3 படத்துக்காக ஹரிக்கு 10 கோடி சம்பளம் என்கிறார்கள். ஒருபுறம் படத்தின் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்., இன்னொரு புறம் ஹீரோக்களின் சம்பளத்துக்கு நிகராக இயக்குனர்களின் சம்பளம் உயர்ந்து வருகிறது.