'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நடிகை வித்யா பாலன் தற்போது, தான் நடித்த கஹானி 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது, பூஷண் குமாரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தில் சுலோச்சனா என்ற சுலு என்கிற ஆர்.ஜே., கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் துமாரி சுலு என்ற நடுத்தர வயதினருக்கான நள்ளிரவு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர்ஜே.,வாக வித்யாபாலன் நடிக்கிறாராம். இப்படத்திற்கு தும்மாரி சுலு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சுரேஷ் திரிவேணி என்ற விளம்பர பட இயக்குனர், இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். வித்யா பாலன் ஆர்ஜே.,வாக நடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் லேகி ரஹோ முன்னா பாய் என்ற படத்தில் வித்யா பாலன் ஆர்ஜே.,வாக நடித்துள்ளார்.