ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போதைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது லேசுப்பட்ட காரியம் இல்லை.கள்ளக்கணக்கு காட்டாத, நம்பகமான விநியோகஸ்தர்கள் அமைய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.
படத்தை வாங்கி வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர்களுக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்பது விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு.இந்த இரண்டும் அமைவது சாதாரண விஷயமில்லை. அந்தவகையில், சசிகுமார் அர்ஷ்டசாலிதான்.
அவரது நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கிடாரி' படத்தை வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கி வெளியிட்டது.கிடாரி படம் வசுந்தரா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்தது.
குறிப்பாக, பி அன்ட் சி திரையரங்குகளில் இப்படம் பெரிய வசூலைக் குவித்தது. இதனால், தற்போது சசிகுமார் தயாரித்து நடித்திருக்கும் 'பலே வெள்ளையத் தேவா'வின் தமிழ்நாடு திரையரங்க உரிமையையும் வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆர்வத்துடன் வாங்கியிருக்கிறது. சோலை பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படம் முழுநீள காமெடிப்படமாக உருவாகியிருக்கிறது இதில் சசிகுமாருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.'பலே வெள்ளையத் தேவா' படத்தை கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சசிகுமார். 2016 ல் சசிகுமாரின் நடிப்பில் வெளிவரும் 5ஆவது படம் 'பலே வெள்ளையத் தேவா'.