ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அஜித்குமார் தனது ஒவ்வொரு படங்களும் ரிலீசானதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை பல ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறார். தான் பெரிதாக பிரபலமாகாத காலத்தில், பல மைல் தூரம் கால்நடையாகவேகூட சென்று வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக பொது மக்கள் அதிகம் கூடாத நாளாக பார்த்து சத்தமில்லாமல் சென்று வருகிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனும் ரெமோ படம் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தெலுங்கில் வெளியாகாத நிலையில், ரெமோ படத்தை முதன்முதலாக தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். அங்கும் ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். அதனால் அந்த கோயில் வளாகத்திற்குள் அவர் சென்றபோது ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவரை சூழ்ந்து கொண்டார்களாம. அதையடுத்து அவர்களுடன் நீண்டநேரம் நின்று செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.