இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
லொள்ளு சபா பராக் பராக் என்ற படத்தை தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்த மன்சூரலிகான், அதன்பிறகு அதிரடி என்ற படத்தையும் தயாரித்து நடித் தார். அதையடுத்து நானும் ரெளடிதான், வேதாளம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு என பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர், ஆடு மேய்ச்சவன் அருவா அழகான பொண்ணு -என்றொரு படத்தை தயாரித்து வந்தார். அதில் தனது மகனையும் அறிமுகம் செய்தார். பின்னர் அந்த படத்திற்கு எனக்கு இது உனக்கு அது என்று பெயரை மாற்றினார்.
ஆனால் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில், படப்பிடிப்பை நிறுத்தி விட்டார் மன்சூரலிகான். காரணம், அந்த படத்தை இயக்கி வந்த குறும்பட இயக்குனர் விக்னேஷ்க்கு போதிய அனுபவம் இல்லாமல் ஸ்பாட்டில் நடிகர் நடிகைகளை வைத்து வேலை வாங்குவதில் அதிக சிரமப்பட்டாராம். அதனால் படப்பிடிப்பை கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள மன்சூரலிகான், தற்போது அந்த படத்தை இயக்க வேறு நல்ல இயக்குனராக தேடி வருகிறாராம்.