Advertisement

சிறப்புச்செய்திகள்

2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நான் மிகவும் பேராசைக்காரி - வித்யாபாலன்

30 நவ, 2016 - 02:58 IST
எழுத்தின் அளவு:
I-am-very-Greedy-Actor---Vidya-Balan
Advertisement

பாலிவுட்டில் எப்படிப்பட்ட ரோலிலும் நடித்து வெற்றி பெறுபவர் தேசிய விருது வாங்கிய நடிகை வித்யாபாலன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‛டீன்' படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. தற்போது, கஹானி எனும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமான கஹானி-2 படத்தில் நடித்திருக்கும் வித்யாபாலன், இப்படம் பற்றியும் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...


கஹானி-யில் இருந்து கஹானி-2 படம் எந்தளவுக்கு மாறுபட்டது.?


இரண்டு படமே வித்தியாசமான படங்கள் என்று இங்கு நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பெயர் தான் கஹானி-2 என்பதை தவிர, கஹானி-2 முதல்பாகத்தின் தொடர்ச்சி அல்ல. இந்தப்படம் அம்மா - மகள் இடையேயான உறவை சொல்லுகிற படமாக இருக்கும். இயக்குநர் சுஜாய் கோஷ், கஹானி-2 படத்திற்கான கதையை எழுதும்போது அது சரியாக வரவில்லை, பிறகு மீண்டும் ஒரு கதையை எழுதினார், அதுவும் சரியாக வரவில்லை. பின்னர் எழுதிய கதைகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து கஹானி-2 படத்தின் கதையை உருவாக்கினார்.


படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?


துர்கா ராணி சிங் எனும் கேரக்டரில் நான் நடிக்கிறேன், இந்தப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் எளிமையான பெண் துர்கா. இயக்குநர் சுஜாய், மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார், அவர் சொன்னது போன்று மேக்-அப் இல்லாமல் நடித்தேன். மிகவும் பயந்த சுபாவம் உடையது எனது கேரக்டர். அதேசமயம், எனது குழந்தையை மர்ம நபர்கள் கடத்திய பிறகு துர்காவின் கேரக்டர் அப்படியே முற்றிலும் மாறிவிடும். பெயருக்கு ஏற்றபடி நிஜ துர்கையாகவே எனது ரோல் மாறிவிடும்.


இயக்குநர் சுஜாய் கோஷ் பற்றி சொல்லுங்க.?


நல்ல மனிதர் சுஜாய். எங்களுக்குள் நல்ல ஒற்றுமையும், புரிந்து கொள்ளும் தன்மையும் இருக்கிறது. வாய் திறந்து பேச வேண்டாம், முகத்தில் வெளிப்படும் பாவணைகளை வைத்து என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வோம். யார் ஒருவர் உங்களை நன்றாக புரிந்து வைத்துள்ளாரோ அவர்கள் தான் உண்மையான நண்பர்கள். ஒரு நடிகை என்பதையும் தாண்டி தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி அவருக்கும், அவரைப்பற்றி எனக்கும் நன்றாக தெரியும். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அவருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.


பெண்கள் சம்பந்தப்பட்ட கதைக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்.?


இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு பேராசைக்காரியான நடிகை. என்னால் எந்த மாதிரி ரோலிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாயந்த படங்களாக அமைந்துவிடுகிறது. பெண்கள் பற்றியும், பெண்களின் வலிமையும் பற்றியும் நிறைய படங்களில் நடித்து விட்டேன். அந்த படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற படங்கள். முன்பெல்லாம் படங்களில் பெண்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது, ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நிறைய பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் வெளிவருகின்றன, ரசிகர்களும் அதை ஏற்கிறார்கள்.


உங்களின் சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லையே...?


உண்மைதான், எனது சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். இது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும். என் படம் சரியாக போகவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவேன். சிலசமயங்களில் அழுவேன, கோபப்படுவேன், சண்டை கூட போடுவேன். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது ரசிகர்கள் கையில் தான் உள்ளது. என்னை பொறுத்தமட்டில் எனது ஒவ்வொரு படமுமே மிகவும் முக்கியமானது, ஏனென்றால் ஒவ்வொரு படத்திற்கும் அதிகமாக உழைக்கிறேன்.


உங்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க.?


சரிஜித் முகர்ஜி இயக்கும் பேகம் ஜான் படத்தில் நடிக்கிறேன். பெங்காலி படமாக ராஜ்காகினி படத்தின் ரீ-மேக் இது. இதுதவிர கமலா சுரயாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கிறேன்.


இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in