ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: ‛‛தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், தமிழ் மொழியும், கலாச்சாரமும் வளர்ந்துள்ளதா என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். தமிழ் திரைப்படங்களுக்கு ‛ யு யுஏ ஏ என மூன்று வகையான தணிக்கை சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. இதில், ‛யு சான்றிதழ் கிடைக்கும் படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு பெற தகுதி உள்ளது.
‛சவாரி என்ற படத்திற்கு, ‛யு சான்றிதழ் அளித்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்விகள்:
*திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம், தமிழ்மொழியும், கலாச்சாரமும் வளர்ந்துள்ளனவா?
* கடந்த 2006 ஆண்டு முதல் படங்களுக்கு வரி விலக்கு அளித்ததன் மூலம் எவ்வளவு தொகை செலவானது?
* வரி விலக்கு அளிக்கப்பட்ட படங்களுக்கான டிக்கெட் விலை ஏன் குறைக்கப்படவில்லை?
* வன்முறை காட்சிகள் நிறைந்த ‛டிவி தொடர்களுக்கு ஏன், ‛ஏ சான்றிதழ் அளிக்க கூடாது?
இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.