ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புகார்களை ஆதாரத்துடன் தான் கூறுகிறோம்; எதையும், சட்டப்படி சந்திக்கத் தயார், என, நடிகர் கார்த்தி கூறினார்.
சென்னையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி அளித்த பேட்டி: நட்சத்திர கிரிக்கெட்டில் ஊழல் நடந்திருப்பதாக, பொய் புகார் கூறுகின்றனர். நாங்கள் நியாயமான முறையில், அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு செய்துள்ளோம். நடிகை ராதிகா சொல்வது போல், எதையாவது பேச வேண்டும் என்பதற்காக, புகார் கூறவில்லை. ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞர்கள் தந்துள்ள ஆதாரத்துடன் தான் பேசுகிறோம். சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம் குறித்து, பொதுச் செயலர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். பொருளாளரான நான், பதில் கூறுவது சரியாக இருக்காது; எதையும், நாங்கள் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.