டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெறும் காமெடி மட்டுமே வேலைக்கு ஆகாது என்ற உண்மையை புரிந்து கொண்டிருக்கிறார் சந்தானம். அதனால் இனி நடிக்கும் படங்களில் காமெடியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்க உள்ளார் சந்தானம்.
இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரெஜினா கேசன்டரா நடிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தனது அடுத்த பட படத்தின் படப்பிடிப்பை துவங்க டிசம்பர் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறார் செல்வராகவன்.
இந்த படத்தில் சந்தானம் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரியான யதார்த்தமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம். சந்தானம் நடிக்கும் படம் என்றாலே காமெடியாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதையும் தாண்டி இப்போது யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து களம் இறங்க உள்ளார். சந்தானத்தின் இந்த புதிய பாதையை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளபோகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.