பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
'அனேகன்' படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்கும் 'கவண்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர், விக்ராந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படமாக உருவாகி வரும் 'கவண்' படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவலின் கதையைத்தழுவித்தான் கவண் படம் உருவாகி வருகிறதாம்.
'மெய்நிகரி' தவிர 'பூமரேங் பூமி', 'உயிர்ச்சொல்'ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கும் கபிலன் ஐந்து கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இதழியல் பட்டம் பெற்ற இவர், தமிழில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.
தற்போது திரைத்துறையில் எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கும் கவண் தவிர, அஜித்-சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் 'அஜித்57', மற்றும் 'இந்திரஜித்', 'சிங்கம்3', 'மதியால் வெல்', 'காஷ்மோரா' இயக்குநர் கோகுலின் அடுத்த படம் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் கபிலன் வைரமுத்து பணியாற்றி வருகிறார்.