'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
பிரபல கர்நாடக சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று தான் காலமானார் என்ற செய்தி மறைவதற்குள் திரையுலகில் அடுத்து ஒரு சோக செய்தி வந்துள்ளது. சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சுபாஷ்(57), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று(நவ.23) காலமானார்.
இயக்குநர் மணிரத்னத்திடம் ‛நாயகன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சுபாஷ், 1988-ம் ஆண்டு பிரபுவை வைத்து ‛கலியுகம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய ‛சத்ரியன்' படம் சூப்பர் - டூப்பர் ஹிட்டாக அமைய அவரை பிரபலமாக்கியது. அதன்பின் பவித்ரா, சுயம்வரம், பிரம்மா, பங்காளி, உத்தம புருஷன், நேசம், நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற சுபாஷ், அங்கு பிரபல கதாசிரியராக திகழ்ந்தார். ஷாரூக்கான் நடித்த ‛சென்னை எக்ஸ்பிரஸ்', ‛தில்வாலே', அக்ஷய் குமார் நடித்த ‛எண்டர்டெயின்மென்ட்', ‛ஹவுஸ்ஃபுல் 3', அஜய் தேவ்கன் நடித்த ‛சண்டே' போன்ற படங்களுக்கு கதாசிரியராக இருந்துள்ளார்.
சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு காரணமாக சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுபாஷ், சிகிச்சை பலன் இன்றி இன்று(நவ., 23ம் தேதி) மரணமடைந்தார். இவர், பராசக்தி, ரத்த கண்ணீர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணன் - பஞ்சு இருவரில், கிருஷ்ணனின் மகன் ஆவார். இயக்குநர் சுபாஷ்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுபாஷின் உடல், சென்னை, தி.நகர், ஹலிபுல்லா சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மாயனத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.