துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' |
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் தனி கணக்கராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் சத்யா மூவீஸ் என்ற பெயரில் தனி நிறுவனம் தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். அதில் பல படங்களுக்கு ஆர்.எம்.வீரப்பனே கதை எழுதியுள்ளார். அப்படி அவர் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் 'ராணுவ வீரன்'.
அந்தக் கதையில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதல்வர் ஆகிவிட்டதால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி அவரை நடிக்க வைத்தார். படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். வாலி, புலமைபித்தன் முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1981ம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு ராணுவ வீரனுக்கும், நக்சலைட் தீவிரவாதிக்குமான மோதல்தான் கதை. ரஜினி ராணுவ வீரனாகவும், சிரஞ்சீவி தீவிரவாதியாகவும் நடித்தனர். சிரஞ்சீவி வில்லனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராகவே தோன்ற வைக்க ஆர்.எம்.வீரப்பன் முயற்சித்தார். அது கடைசி வரை முடியவில்லை. படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமானது.