'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டில் பல பிரபலங்கள் கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர முன்வந்தனர். அதில் இன்று வரை தத்தெடுத்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருபவர்கள் மிகச்சிலரே. அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பெயரில் துவங்கிய அறக்கட்டளை வாயிலாக கிராமத்தை தத்தெடுத்து நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றார்.
தெலுங்கானா மாநிலத்தின் மெகபூபு நகர் பகுதியில் கிராமம் ஒன்றின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து பிரகாஷ் ராஜ் அம்மக்களின் அன்பிற்கு பாத்திரமாகியுள்ளார். கம்மடனம் எனும் கிராமத்தில் போர் போட்டு குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளார் பிரகாஷ் ராஜ். மேலும் பணிகளை தானே நின்று பிரகாஷ் ராஜ் மேற்பார்வையும் செய்துள்ளார். இன்று(மார்ச் 26) தனது பிறந்த நாள் கொண்டாடும் பிரகாஷ் ராஜ் தனது பிறந்த நாள் பரிசாக கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளார்.