மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு மதுரையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது. நடிகர் கஞ்சா கருப்புக்கும், சிவகங்கையை சேர்ந்த சங்கீதா என்ற பிஸியோதெரபி டாக்டருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்ததது. அடுத்தடுத்த சினிமாக்களில் பிஸியாக இருந்த கஞ்சா கருப்பு, திருமணத்துக்கு பிறகு மலேசியாவுக்கு தேனிலவு சென்றார். இந்நிலையில் சங்கீதா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இன்று (20-04-2011) காலை சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து கஞ்சா கருப்பு மதுரைக்கு விரைந்து வந்தார். குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அவர் நண்பர்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.