'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
பெருந்துறை : இடுப்பை கிள்ளிய வாலிபரை நடிகை சினேகா திட்டி, எச்சரித்து அனுப்பினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நேற்று நடந்த ஓட்டல் திறப்பு விழாவுக்கு நடிகை சினேகா வந்திருந்தார். நீல வண்ண சேலை அணிந்திருந்தார். கழுத்தில் டாலர் செயின் மட்டும் அணிந்திருந்தார். ஓட்டலை திறந்து வைத்த அவர், ஓட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணையை பார்வையிடச் சென்றார். அவரைப் பார்க்கவும், மொபைல் போன் கேமராவில் படம் எடுக்கவும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பண்ணைக்கு சென்ற அவரை, உள்ளூர் பெண்கள் சிலர் மொபைல் போன் மூலம் படம் எடுக்க அனுமதி கேட்டனர். அவரும் சிரித்தபடி, "போஸ் கொடுத்தார். அப்போது, அவருக்கு பின்புறமாக நின்றிருந்த ஒருவர், அவரது இடுப்பை கிள்ளினார். டென்ஷனான சினேகா, ""அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க, என்று கடிந்து கொண்டார். உடனிருந்தவர்களும் அந்த வாலிபரை திட்டி, எச்சரித்து அனுப்பினர். சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.