துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 23ந் தேதி முதல் ஒளிரப்பாகும் புதிய தொடர், ''அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்''. இதில் திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி உள்பட 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அசோக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செய்யாறு ரவி இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தான் காதலித்து மணந்த கணவனுடன் சந்தோஷமாக வாழ்கிறார் அன்னக்கொடி. திடீரென்று ஒரு நாள் கணவன் கடத்தப்படுகிறான். அவனைத் தேடி தன் ஐந்து மகள்களுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போதுதான் கணவன் தென்காசியை சேர்ந்தவன் என்றும் பெரிய ஜமீன் குடுபத்து வாரிசு என்றும் தெரிய வருகிறது. ஊர் மக்களும், ஜமீன் குடும்பமும் அன்னக்கொடியையும் அவளது மகள்களையும் துரத்தி அடிக்கிறது. அதையும் மீறி அன்னக்கொடி கணவனை எப்படி மீட்கிறார் என்கிற கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.