திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் -2 என வரிசை கட்டி படங்கள் வெளிவர உள்ள நிலையில், அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, மகள் ஸ்ருதிஹாசனின் கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.
அதில் கமல் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம் குறித்து ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். அதற்கு "வாமமார்க்கம்" என்று பெயரிட்டுள்ளேன். வாமமார்க்கம் என்றால் எனக்கு தெரிந்தவரை, இடது கை பாதை என்று பொருள். ஆனால், சிலர் அகோரிகளை, வாமமார்ஜிகள் என்று கூறுகிறார்கள். அது மதம் சம்பந்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரை, நம்நாட்டில் இடதுசாரிகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளதால், இதை படமாக்கலாம் என்று நினைத்துள்ளேன்.