ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் (86) ஐதராபாத்தில் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட காந்தா ராவ், அதற்காக வீட்டிலிருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (22ம்தேதி) காலமானார்.
நடிகர் காந்தா ராவ் தெலுங்கில் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் குடிபந்தா என்ற கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்த இவர், 1951ம் ஆண்டு "நிர்தோஷி' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரைப் போல வாள் சண்டை போடுவார். இதனால் ஆந்திர எம்.ஜி.ஆர். என்று ரசிகர்கள் அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.