பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனது படங்களுக்கு வித்தியாசமான தமிழ்ப்பெயர் சூட்டுபவர் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் பெயர்களை சூட்டிய இவர், தனது புதிய படம் ஒன்றிற்கு நடுநிசி நாய்கள் என்று பெயரிட்டிருக்கிறார். புதுமுகம் வீரா நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். க்ரைம் - த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாடல்களை கிடையாதாம். தற்போது இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறது நடுநிசி நாய்கள். மறைந்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளில் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் நடுநிசி நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைப்பைப் போலவே படமும் கவித்துவத்துடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.