முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தனது படங்களுக்கு வித்தியாசமான தமிழ்ப்பெயர் சூட்டுபவர் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் பெயர்களை சூட்டிய இவர், தனது புதிய படம் ஒன்றிற்கு நடுநிசி நாய்கள் என்று பெயரிட்டிருக்கிறார். புதுமுகம் வீரா நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். க்ரைம் - த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாடல்களை கிடையாதாம். தற்போது இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறது நடுநிசி நாய்கள். மறைந்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளில் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் நடுநிசி நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைப்பைப் போலவே படமும் கவித்துவத்துடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.