நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் |
தனது படங்களுக்கு வித்தியாசமான தமிழ்ப்பெயர் சூட்டுபவர் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பதற்கு முன்பிருந்தே தமிழ் பெயர்களை சூட்டிய இவர், தனது புதிய படம் ஒன்றிற்கு நடுநிசி நாய்கள் என்று பெயரிட்டிருக்கிறார். புதுமுகம் வீரா நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். க்ரைம் - த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாடல்களை கிடையாதாம். தற்போது இறுதிகட்ட சூட்டிங்கில் இருக்கிறது நடுநிசி நாய்கள். மறைந்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளில் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் நடுநிசி நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைப்பைப் போலவே படமும் கவித்துவத்துடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.