பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் என்ற சரித்திர தொடரில் இளவரசி விஷாலியாக நடிக்கிறார். தன்னை சுற்றி பின்னப்படும் சதிவலைகளில் இருந்து மீண்டு, தன்னைப் பற்றிய மர்மங்களை கண்டுபிடித்து நாட்டை காக்கிற முக்கியமான கேரக்டர்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: எனது முதல் சின்னத்திரை தொடர் இது. முதல் தொடரிலேயே மன்னன் மகளாக நடிப்பதில் மகிழ்ச்சி. பளபள உடைகள் அணிந்து, வாள் ஏந்தி, வீர வசனம் பேசி என எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது போல இருந்தது அதற்குள் 100 எபிசோட் கடந்து விட்டது. நடிப்பதற்கு நல்ல களம் இந்த சீரியலில் இருப்பதால் நானும் நின்று ஆடி வருகிறேன். விரைவில் நான் போடும் வாள் சண்டையையும் பார்க்க போகிறீர்கள் என்கிறார் மதுமிதா.