பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு |
குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் என்ற சரித்திர தொடரில் இளவரசி விஷாலியாக நடிக்கிறார். தன்னை சுற்றி பின்னப்படும் சதிவலைகளில் இருந்து மீண்டு, தன்னைப் பற்றிய மர்மங்களை கண்டுபிடித்து நாட்டை காக்கிற முக்கியமான கேரக்டர்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: எனது முதல் சின்னத்திரை தொடர் இது. முதல் தொடரிலேயே மன்னன் மகளாக நடிப்பதில் மகிழ்ச்சி. பளபள உடைகள் அணிந்து, வாள் ஏந்தி, வீர வசனம் பேசி என எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது போல இருந்தது அதற்குள் 100 எபிசோட் கடந்து விட்டது. நடிப்பதற்கு நல்ல களம் இந்த சீரியலில் இருப்பதால் நானும் நின்று ஆடி வருகிறேன். விரைவில் நான் போடும் வாள் சண்டையையும் பார்க்க போகிறீர்கள் என்கிறார் மதுமிதா.