தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் என்ற சரித்திர தொடரில் இளவரசி விஷாலியாக நடிக்கிறார். தன்னை சுற்றி பின்னப்படும் சதிவலைகளில் இருந்து மீண்டு, தன்னைப் பற்றிய மர்மங்களை கண்டுபிடித்து நாட்டை காக்கிற முக்கியமான கேரக்டர்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: எனது முதல் சின்னத்திரை தொடர் இது. முதல் தொடரிலேயே மன்னன் மகளாக நடிப்பதில் மகிழ்ச்சி. பளபள உடைகள் அணிந்து, வாள் ஏந்தி, வீர வசனம் பேசி என எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது போல இருந்தது அதற்குள் 100 எபிசோட் கடந்து விட்டது. நடிப்பதற்கு நல்ல களம் இந்த சீரியலில் இருப்பதால் நானும் நின்று ஆடி வருகிறேன். விரைவில் நான் போடும் வாள் சண்டையையும் பார்க்க போகிறீர்கள் என்கிறார் மதுமிதா.