ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் என்ற சரித்திர தொடரில் இளவரசி விஷாலியாக நடிக்கிறார். தன்னை சுற்றி பின்னப்படும் சதிவலைகளில் இருந்து மீண்டு, தன்னைப் பற்றிய மர்மங்களை கண்டுபிடித்து நாட்டை காக்கிற முக்கியமான கேரக்டர்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: எனது முதல் சின்னத்திரை தொடர் இது. முதல் தொடரிலேயே மன்னன் மகளாக நடிப்பதில் மகிழ்ச்சி. பளபள உடைகள் அணிந்து, வாள் ஏந்தி, வீர வசனம் பேசி என எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது போல இருந்தது அதற்குள் 100 எபிசோட் கடந்து விட்டது. நடிப்பதற்கு நல்ல களம் இந்த சீரியலில் இருப்பதால் நானும் நின்று ஆடி வருகிறேன். விரைவில் நான் போடும் வாள் சண்டையையும் பார்க்க போகிறீர்கள் என்கிறார் மதுமிதா.