அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த மதுமிதா பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார். இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது காதல் மெய்ப்பட என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மன்னன் மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை வாய்ப்புகள் என்னை விடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது. திருமணமான புதிதில் ராதிகா மேடம்கூட கூப்பிட்டாங்க. எனக்குதான் சின்ன தயக்கம் இருந்தது. அதற்குள் பையன் பிறந்திட்டான் அவனை கவனிக்க வேண்டியது இருந்தது. இப்போ அவன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டான். தெலுங்குல சில டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போதான் டி.வியோட ரீச் தெரிஞ்சுது. இப்போது துணிச்சலா சீரியல்ல நடிக்க வந்துட்டேன். என் கணவர் தெலுங்கு சினிமால பிசியா நடிக்கிறார். வார நாட்களில் சென்னையில் நடித்து விட்டு சனி, ஞாயிறில் ஐதராபாத்துக்கு பறந்திடுவேன். என்கிறார் மதுமிதா.