Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருதும் ; டைரக்டர் பாலா வருத்தமும்!

24 ஜன, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் பாலாவுக்கு நான் கடவுள் படம் தேசிய விருதை பெற்றுத் தந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பாலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேசிய விருதை எனது குரு பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன், என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

என்னை விட மிகப்‌பெரிய இயக்குனர்கள் மணிரத்னம், பாலுமகேந்திரா, கே.பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். தேசிய விருது கிடைத்திருப்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது; கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இறக்கை கட்டி பறப்பது போல் இருக்கிறது. அதே நேரம் இந்த விருது எனக்கு கிடைத்ததற்காக என்னை விட அதிகம் சந்தோஷப்படும் இரண்டு ஜீவன்கள் இருக்கிறார்கள். ஒருவன் என் குரு பாலுமகேந்திரா, இன்னொருவர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலாம்மா. இந்த தேசிய விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நான் எப்போதுமே எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து படம் எடுக்க மாட்டேன். நான் கடவுள் படத்தையும் விருது எதிர்பார்ப்புடன் எடுக்கவில்லை. என்னை நம்பி வந்த நடிகர் - நடிகைகளுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது கிடைக்க வேண்டும் என நினைப்பேன். என்னைவிட அவர்கள்தான் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டார்கள். பூஜா முகம் முழுக்க கறுப்பு மை பூசி, கண்களில் லென்ஸ் வைத்து கஷ்டப்பட்டு நடித்தார். அவர்களுக்கெல்லாம் விருது கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது.

என்னுடைய அடுத்த படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். இனிமேல் நீ இருட்டு ஏரியாவுக்குள் போகக்கூடாதுன்ன இளையராஜாவும், பாலு மகேந்திராவும் என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார்கள். அதுபோன்ற படங்களை இனி இயக்க மாட்டேன். இனி நான் இயக்கும் படங்கள் சராசரி மனிதர்களைப் பற்றியதாக இருக்கும்.

இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

anandan - chennai,இந்தியா
14 செப், 2011 - 18:35 Report Abuse
 anandan நன் உங்களிடம் உதவியாளராக ஆசை படுகிறேன்
Rate this:
முத்துக்குமார் - Chennai,இந்தியா
02 மே, 2011 - 12:57 Report Abuse
 முத்துக்குமார் பாலா அவர்கள் அஜித் விவகாரத்தில் நடந்து கொண்டது மிகவும் ரவுடியாக செயல்பட்டார்... அவர் எல்லாம் ஒரு மனிதர்........
Rate this:
je - TN,இந்தியா
18 அக், 2010 - 02:35 Report Abuse
 je நீ தமிழ் சினிமாவின் கடவுள், வாழ்க வளமுடன்!!!
Rate this:
கா.மாரியப்பன் - Karaikkudi amaravathi pudur ,இந்தியா
08 அக், 2010 - 14:08 Report Abuse
  கா.மாரியப்பன் உணர்ச்சியின் பிரவாகம் கவிதை,உண்மையின் பிரவாகம் பாலா.இவருக்கு இணை இவரே.சரித்திரம் படைத்த, படைக்க போகிற மாமனிதன் 100 கோடியில் தனி வித்து நம் சொத்து. தயவு செய்து இருட்டும், இருட்டில் தேடுவதை மறந்து விட வேண்டாம் அன்புடன் காமா.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in