சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
டைரக்டர் பாலாவுக்கு நான் கடவுள் படம் தேசிய விருதை பெற்றுத் தந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் பாலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேசிய விருதை எனது குரு பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன், என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
என்னை விட மிகப்பெரிய இயக்குனர்கள் மணிரத்னம், பாலுமகேந்திரா, கே.பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். தேசிய விருது கிடைத்திருப்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது; கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இறக்கை கட்டி பறப்பது போல் இருக்கிறது. அதே நேரம் இந்த விருது எனக்கு கிடைத்ததற்காக என்னை விட அதிகம் சந்தோஷப்படும் இரண்டு ஜீவன்கள் இருக்கிறார்கள். ஒருவன் என் குரு பாலுமகேந்திரா, இன்னொருவர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலாம்மா. இந்த தேசிய விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நான் எப்போதுமே எனக்கு விருது கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்து படம் எடுக்க மாட்டேன். நான் கடவுள் படத்தையும் விருது எதிர்பார்ப்புடன் எடுக்கவில்லை. என்னை நம்பி வந்த நடிகர் - நடிகைகளுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது கிடைக்க வேண்டும் என நினைப்பேன். என்னைவிட அவர்கள்தான் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டார்கள். பூஜா முகம் முழுக்க கறுப்பு மை பூசி, கண்களில் லென்ஸ் வைத்து கஷ்டப்பட்டு நடித்தார். அவர்களுக்கெல்லாம் விருது கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது.
என்னுடைய அடுத்த படம் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். இனிமேல் நீ இருட்டு ஏரியாவுக்குள் போகக்கூடாதுன்ன இளையராஜாவும், பாலு மகேந்திராவும் என்னிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார்கள். அதுபோன்ற படங்களை இனி இயக்க மாட்டேன். இனி நான் இயக்கும் படங்கள் சராசரி மனிதர்களைப் பற்றியதாக இருக்கும்.
இவ்வாறு டைரக்டர் பாலா கூறினார்.