Advertisement

சிறப்புச்செய்திகள்

புதுமுகங்களின் காதல் கதை | பிளாஷ்பேக் : மூன்று சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்தும் சோபிக்காத மாலதி | பிளாஷ்பேக் : தமிழ் படங்களில் நடித்த நாகினி அனிதா | ஜூன் 20ல் வெளியாகும் சுரேஷ் கோபியின் திரைப்படம் 'ஜேஎஸ்கே' | 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு : வில்லன் நடிகருக்கு சம்பந்தமில்லை | தொடரும் ஓடிடி ரிலீஸை தொடர்ந்து சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | உபேந்திராவின் படங்களை இயக்கியிருந்தால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன் : இயக்குனர் சுகுமார் புகழாரம் | வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி கேட்கும் தர்ஷன் : அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு | என் மேல நம்பிக்கை வெச்ச அஜித் : ஆதிக் உருக்கம் | பவன் கல்யாண் படத்தில் சத்யராஜ் நடித்தது ஏன்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எந்த படத்துக்கும் 3 நாட்களுக்குமேல் இசை அமைத்ததில்லை: இளையராஜா சவால்

15 டிச, 2013 - 05:40 IST
எழுத்தின் அளவு:

இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாட்டுக்கு மெட்டு வரவேண்டும் என்றால் கேரளாவின் படகுவீட்டுக்கு போக வேண்டும் அல்லது வெளிநாட்டு பனிமலைகளுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ், நேற்று வந்த அனிருத் இவர்களுக்கெல்லாம் படத்துக்கு மியூசிக் போட வேண்டும் என்றால் கடல் கடந்து சென்றால்தான் முடியும். கோடிக் கணக்கில் சம்பளத்தையும் கொடுத்துவிட்டு தயாரிப்பாளர் இதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.


இசை என்பது ரசித்து செய்ய வேண்டிய ஒன்று நான் ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைக்க நான்கு மாதங்கள் வரை எடுத்துக் கொள்வேன் என்று அண்மையில் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று (டிசம்பர் 14) நடந்த ஒரு ஊர்ல என்ற படத்தின் ஆடியோ விழாவில் இளையராஜா பேசினார். அதன் சுருக்கம் இது...


நான் எப்போதுமே புதியவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், டைரக்டரும் என்னிடம் வந்தார்கள். படத்தை எடுத்து முடித்திருந்தார்கள். படத்தை பார்த்துவிட்டு அது பிடித்திருந்ததால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன். இரண்டே நாளில் இசை அமைத்து படத்தை அவர்கள் கையில் கொடுத்து விட்டேன்.


இந்தப் படம் மட்டுமல்ல எந்தப் படத்துக்கும் பின்னணி இசை அமைக்க நான் மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதில்லை. சில்வர் ஜூப்ளி படமாக இருந்தாலும் சரி, 100 நாள் ஓடிய படமாக இருந்தாலும் சரி என் தியேட்டரில் இருப்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான்.


அந்தக் காலத்திலேயே புதியவர்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். என் பெயர் அவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. இப்போதும் அமைத்துக் கொடுக்கிறேன். சிலர் அவர்கள் படத்துக்கெல்லாம் இசை அமைக்கிறீர்களே என்பார்கள். நான் இசை அமைத்து நீ பெரிய ஆளா வந்த மாதிரி அவரும் வந்துவிட்டு போகட்டுமே என்பேன். உணக்கான இடம் உனக்கு அவருக்கான இடம் அவருக்கு என்று சொல்லிவிடுவேன்.


இப்போதும் புதியவர்களே தைரியமாக வாருங்கள் நான் இருக்கிறேன்.


இவ்வாறு இளையராஜா பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in