ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் இதுவரை எழுதியுள்ள கதைகள், கட்டுரைகள், சிறை அனுபவங்களை புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளார். அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பேரறிவாளன் சிறையில் இருந்தபடியே ஒரு சினிமாவுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அதை தங்க மீன்கள் ராம் திரைப்படமாக எடுக்க உள்ளார். இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர் பாமரனுடன் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை சந்தித்து பேசினார்.
பின்னர் ராம் இதுபற்றி கூறியதாவது: பேரறிவாளனை நான் சிறையில் சந்திப்பது புதிதல்ல. அன்பு, நட்பு நிமித்தமாக சந்தித்தேன். பேரறிவாளனுக்கும் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிரபராதியாக அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். மரண தண்டனைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன். பேரறிவாளன் கதை ஒன்றையும் திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறேன். இதுகுறித்து அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன் என்றார்.