சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
வாமனன் ப்ரியாஆனந்த், எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகுதான் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். அதனால் இதுவரை மார்க்கெட்டில் மந்தமாக இருந்த அவர் இப்போது ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி நடித்து வரும் ப்ரியாஆனந்தைத்தேடி சில புதுமுக நடிகர்களின் படவாய்ப்புகளும் முற்றுகையிடுகிறதாம். அதோடு, கால்சீட் கொடுத்தால் அதிகப்படியான சம்பளம் தருவதாகவும் சொல்கிறார்களாம்.
ஆனால், முதலில் அதிக சம்பளம் என்றதும் சபலப்பட்ட ப்ரியாஆனந்த், அந்த படங்களில் நடிக்கவும் தயாராகி வந்தார். திடீரென்று, தனது மார்க்கெட் எகிறியிருக்கும் இந்த நேரத்தில் புதுமுகங்களுடன் நடித்தால், ஏறின வேகத்திலேயே மார்க்கெட் இறங்கிவிடும் என்பதை யூகித்து விட்ட அவர், அப்படங்களில் தன்னால் நடிக்க முடியாது என்று உறுதியாக மறுத்து விட்டாராம். மேலும், இப்போதைக்கு அயிட்டம் பாடல்களுக்கும் ஆடமாட்டேன் என்ற கொள்கையையும் கடைபிடிப்பதாக சொல்கிறார் ப்ரியாஆனந்த்.