விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
நடிகை நயன்தாரா தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். தற்போது குறிப்பிட்டு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனால் அவர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் நிதிலனை அழைத்து நயன்தாரா புதிய கதை ஒன்று கேட்டுள்ளார். இதனை படமாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக நிதிலனுக்கு ரூ. 3 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.