விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதை கடந்த நிலையிலும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து டிவி நிகழ்ச்சி, விளம்பரம் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இவர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
காலில் ஏற்பட்ட ரத்த குழாய் அடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அமிதாப் பச்சன் இன்றே வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். காலுக்கு தான் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டது அவருக்கு இதயத்தில் எந்த பிரச்னை இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.