பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, மலிவு விலை உணவகம் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் தொடங்கி இருக்கிறார். சாலை ஓரத்தில் சிறிய வண்டியில் இந்த உணவகம் செயல்படுகிறது. இதில் வெஜிடெபிள் பிரியாணி வெறும் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை இங்கு இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 500 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.