Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவசி படத்துக்கு வசனம் எழுதியது சீமானா ? இயக்குனர் விளக்கம்

31 டிச, 2023 - 10:02 IST
எழுத்தின் அளவு:
Did-Seeman-write-the-dialogues-for-Thavasi?-Directors-description

நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைபாடு காரணமாக டிச.,28ல் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, "விஜயகாந்த் நடித்த தவசி படத்திற்கு நான் தான் வசனம் எழுதினேன். அந்த சமயத்தில் அவருடன் நெருங்கி பழகி அவருடைய குணாதிசயங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது" என்று கூறியிருந்தார்.

விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தவசி படத்தை இயக்குனர் உதயசங்கர் என்பவர் இயக்கி இருந்தார். அந்த படத்தின் டைட்டில் கார்டில் திரைக்கதை வசனம் என உதயசங்களின் பெயர் தான் இடம் பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு பலரும் சீமான் வேண்டும் என்றே பெருமைக்காக பொய் சொல்கிறார் என சோசியல் மீடியாவில் கிண்டலடித்து குற்றம் சாட்ட துவங்கினர். ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று படத்தின் இயக்குனர் உதயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் உதயசங்கர், “தவசி படத்திற்கு முழு வசனங்களையும் எழுதியது சீமான் தான். படப்பிடிப்பில் சின்னச்சின்ன மாற்றங்களை மட்டுமே நான் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே இரண்டு மூன்று தோல்வி படங்களை வரிசையாக கொடுத்திருந்த அவர் அடுத்த படம் இயக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தார். தவசி படத்தில் வசனகர்த்தா என தனது பெயரை போட்டால் பலரும் தன்னை வசனம் எழுத மட்டுமே அழைக்க ஆரம்பித்தால், அடுத்ததாக தனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காதோ என பயந்து வசனகர்த்தா என தனது பெயரை போட வேண்டாம் என கூறிவிட்டார். அதனால் தான் டைட்டில் கார்டில் முதலில் சீமானுக்கு நன்றி தெரிவித்து இருந்தோம்” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நேருக்குநேர் மோதும் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்நேருக்குநேர் மோதும் தனுஷ், ... சென்டிமென்டாக டைட்டில் தேடிப்பிடிக்கும் கவின் சென்டிமென்டாக டைட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)