Advertisement

சிறப்புச்செய்திகள்

யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ்: இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா

10 நவ, 2023 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Attractive-pose-for-magazine:-Samantha-gave-a-pleasant-surprise

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்த படத்தையெல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு, புதிய படங்கள் எதிலும் ஒப்புக் கொள்ளாமல் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கான மேல் சிகிச்சை பெறுபவதற்காக அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்றார் சமந்தா. சிகிச்சை முடிந்து சமீபத்தில் இந்தியா திரும்பினார். அடுத்து அவர் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு தடாலடியாக கவர்ச்சி போஸ் கொடுத்து அனைரைவும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதுவும் பிகினி உடையில்... மேலும் அந்த பத்திரிகையின் அட்டைப்படத்திற்கும் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த நடிகைகள் காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் லைக்கை தட்டிவிட்டிருக்கிறார்கள்.

இந்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அந்த பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சமந்தா வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தோல்வியுற்ற திருமணத்தை எட்டியபோது, என் உடல்நலம் மற்றும் வேலை பாதிக்கப்பட்டது, கடந்த இரண்டு வருடங்களாக நான் சகித்ததை விட மிகக் குறைவாகவே மக்கள் அறிவார்கள்.

அந்த நேரத்தில், உடல்நலப் பிரச்னைகளைச் சந்தித்து மீண்டும் வந்த நடிகர்கள் அனுபவித்த கஷ்டங்களை பற்றி நான் படித்தேன். அவர்களின் கதைகளைப் படித்தது எனக்கு உதவியது. அவர்கள் அதைச் செய்தால், என்னாலும் முடியும் என்பதை அறிய இது எனக்கு பலத்தை அளித்தது.

இந்த தேசத்தில் நேசித்த நட்சத்திரமாக இருப்பது ஒரு நம்பமுடியாத பரிசு. எனவே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எத்தனை சூப்பர் ஹிட்கள் மற்றும் பிளாக்பஸ்டர்கள் இருந்தது, எத்தனை விருதுகள் வெல்லப்பட்டுள்ளது, சரியான உடல், அல்லது மிக அழகான ஆடைகள் ஆகியவை எப்போதும் முக்கியமல்ல. வலி, கஷ்டங்கள், தாழ்வுகள் இவற்றை பகிரங்கமாக சந்திப்பதுதான் முக்கியம். இனி நான் என்னிடம் உள்ள எல்லாவற்றுடனும் போராடப் போகிறேன். என்னை பார்த்து இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களும் தொடர்ந்து போராடுவதற்கான வலிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பதினாறு ஆண்டுகளாக நடக்கும் 'பருத்தி வீரன்' வழக்குபதினாறு ஆண்டுகளாக நடக்கும் ... 'கேப்டன் மில்லர்' 3 பாகமாக வெளிவரலாம்: இயக்குனர் சொல்கிறார் 'கேப்டன் மில்லர்' 3 பாகமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)