கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வருகிற 29ம் தேதி படம் வெளிவருகிறது. இதுதான் என் கடைசி படம் என்று அறிவித்த உதயநிதி, இதுதான் எனது கடைசி சினிமா பேட்டி என்று அறிவித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் பார்த்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நிறைவேறி விட்டது. மிஷ்கின், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அதுவும் நிறைவேறியது.
'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடிக்கும்போது, 'மாமன்னன்' எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போதும் உறுதியாக இருக்கிறேன். முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும்.
கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பதாகவும் வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவதாகவும் இருந்தது. நான் அமைச்சரானவுடனே கமலிடம் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். 'அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரைப்பணியை விட, மக்கள் பணி மகத்தானது. இந்தக்கதை உங்களுக்காக காத்திருக்கும்” என்று சொல்லி என்னை வாழ்த்தினார்.
'மாமன்னன்' படத்தில் வடிவேலுதான் மாமன்னன், நான் சாதாரண மன்னன். இந்த படம் மாரி செல்வராஜின் அரசியலை பேசுகிறது. நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படமாக எனக்கு பிடித்த படமாக மாமன்னன் இருக்கும். என்றார்.