'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? |
திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. அதோடு திருமணத்திற்கு முன்பு நடித்ததை போலவே இப்போதும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் என்ற படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே கதாநாயகியாக நடிப்பதற்கு வாங்கும் அளவுக்கு அவர் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அப்படக்குழுவினர் தொடர்ந்து ஸ்ரேயாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தாகூர் என்ற படத்தில் ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.