ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருவதுடன் பாலிவுட்டிலும் நுழைந்துவிட்டார் நடிகை சமந்தா. ஆனால் இன்னும் பக்கத்து திரையுலகமான மலையாளத்தில் அவர் படம் எதிலும் நடிக்கவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய தேடி வந்தாலும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது அவரது நடிப்பில் தெலுங்கு, தமிழில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகன் மலையாள நடிகர் தேவ் மோகன், மிகவும் வரவேற்பு பெற்ற சூபியும் சுஜாதையும் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர். அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கேரளாவிலும் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட சமந்தா பேசும்போது, “எனக்கு மலையாள படங்களை பார்ப்பதிலும் மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகம். என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்றுக்கொடுக்காமல் விட்டு விட்டார்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு இப்போதும் ஒரு வருத்தம் கூட இருக்கிறது. இங்குள்ள எனக்கு பிடித்தமான நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக மலையாளம் கற்றுக்கொள்வேன்.
மலையாள திரையுலகில் உள்ள ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், எனக்கு சில நேரங்களில் ஒரே மாதிரியாக நடிக்கிறோமோ என்கிற எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக மலையாள படங்களை பார்த்து தான் எனது நடிப்பில் வித்தியாசம் காட்டுவதற்கு ஐடியாக்களை பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.