விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் புஷ்பா பாகம் 1. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காடுகளில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் வரும் ஏப்ரல் 8ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்த படத்தின் சிறப்பு வீடியோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .அல்லு அர்ஜூனின் பிறந்தநாளுக்கு இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.