மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ராஜா ராணி 2 தொடரில் கடந்த ஒருவருடமாக ஹீரோயினாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவரே விலகினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? என நேயர்கள் பலரும் குழம்பியுள்ளனர். அதேசமயம் ரியாவுக்கு பதில் யார் புதிய சந்தியாவாக நடிக்க போகிறார் எனவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆஷா கவுடா இனி சந்தியாவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரின் மூலம் அறிமுகமான ஆஷா கவுடா அந்த தொடரில் நந்தா மாஸ்டருடன் சேர்ந்துகொண்டு 'ஊம் சொல்றியா மாமா' பாடலுக்கு செமயாக ஒரு குத்து குத்தியிருப்பார். அப்போதே இளைஞர் வட்டாரம் ஆஷா கவுடாவிடம் சரண்டராகிவிட்டது. கோகுலத்தில் சீதை தொடர் முடிவுற்ற நிலையில் ஆஷா கவுடா எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது அவர் சந்தியாவாக ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.