ஸ்ரேயா ரெட்டி நடிப்பதை இடையூறு செய்வது யார்? - சொல்வாரா வசந்தபாலன் | அடுத்த வாரிசு நடிகர் விஜய் கனிஷ்கா : ஹிட் கொடுப்பாரா ? | 'புஷ்பா 2' வியாபாரத்தில் சிக்கல் | மீண்டும் கதையின் நாயகனாக வெற்றி பெறுவாரா சூரி? | சிரஞ்சீவியை சந்தித்த அஜித் | ஜூலையில் திரைக்கு வரும் பாலாவின் வணங்கான் | கமலின் தக்லைப் படத்தில் மாஸ் குத்து பாடல் | புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் 6 மொழிகளில் வெளியானது | மோடி வாழ்க்கை வரலாறு படத்தை யார் இயக்க வேண்டும் தெரியுமா? - சத்யராஜ் சொன்ன பதில் | நான் வைலன்ஸ் முதல் பார்வையை வெளியிட்ட பிரபலங்கள் |
ராஜா ராணி 2 தொடரில் கடந்த ஒருவருடமாக ஹீரோயினாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவரே விலகினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? என நேயர்கள் பலரும் குழம்பியுள்ளனர். அதேசமயம் ரியாவுக்கு பதில் யார் புதிய சந்தியாவாக நடிக்க போகிறார் எனவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆஷா கவுடா இனி சந்தியாவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரின் மூலம் அறிமுகமான ஆஷா கவுடா அந்த தொடரில் நந்தா மாஸ்டருடன் சேர்ந்துகொண்டு 'ஊம் சொல்றியா மாமா' பாடலுக்கு செமயாக ஒரு குத்து குத்தியிருப்பார். அப்போதே இளைஞர் வட்டாரம் ஆஷா கவுடாவிடம் சரண்டராகிவிட்டது. கோகுலத்தில் சீதை தொடர் முடிவுற்ற நிலையில் ஆஷா கவுடா எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது அவர் சந்தியாவாக ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.