விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' |
ராஜா ராணி 2 தொடரில் கடந்த ஒருவருடமாக ஹீரோயினாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார். அவரே விலகினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? என நேயர்கள் பலரும் குழம்பியுள்ளனர். அதேசமயம் ரியாவுக்கு பதில் யார் புதிய சந்தியாவாக நடிக்க போகிறார் எனவும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆஷா கவுடா இனி சந்தியாவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரின் மூலம் அறிமுகமான ஆஷா கவுடா அந்த தொடரில் நந்தா மாஸ்டருடன் சேர்ந்துகொண்டு 'ஊம் சொல்றியா மாமா' பாடலுக்கு செமயாக ஒரு குத்து குத்தியிருப்பார். அப்போதே இளைஞர் வட்டாரம் ஆஷா கவுடாவிடம் சரண்டராகிவிட்டது. கோகுலத்தில் சீதை தொடர் முடிவுற்ற நிலையில் ஆஷா கவுடா எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகவில்லை. தற்போது அவர் சந்தியாவாக ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதால் அவரது ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.