Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா அம்மாவான விவகாரம்: 2016ல் நடந்ததா பதிவு திருமணம்?

16 அக், 2022 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Surrogacy-row:-Marriage-registered-6-years-ago,-surrogate-a-relative,-says-Nayanthara

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், நான்கு மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவன், 'டுவிட்டரில்' பதிவிட்டார். வாடகை தாய் வாயிலாக குழந்தை பிறந்திருப்பதால், உரிய விதிமுறை பின்பற்றப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்குனர் தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதேபோல், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள, பிரபல குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில், 2021 டிச., மாதத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் வாயிலாகவே குழந்தை பெற்று எடுத்ததாகவும், விதி மீறப்படவில்லை எனவும், விசாரணை குழுவிடம், நயன்தாரா தரப்பில் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்து உள்ளதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” : கார்த்திஇந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” : ... 'விக்ரம்' வசூலை முறியடித்த 'பொன்னியின் செல்வன்' 'விக்ரம்' வசூலை முறியடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)