Advertisement

சிறப்புச்செய்திகள்

யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ், ஐஸ்வர்யா சேர்ந்து வாழ முடிவு: கடமையை செய்த ரஜினி

06 அக், 2022 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Dhanush,-Aishwarya-decide-to-live-together

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள் வளர்ந்து வரும் சிறிய நடிகரை மணக்கிறாரே என்ற ஆச்சர்ய அலைகள் அப்போது பரவியது. ஆனாலும் தனுஷ் தனது சுய உழைப்பால், முயற்சியால் தேசிய விருது வரைக்கும் உயர்ந்தார். இன்று வணிக மதிப்புள்ள ஒரு நடிகராக வலம் வருகிறார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். இது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இது ரஜினிக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி “எவ்வளவு வசதி, பணம் குவிந்தாலும் மனதில் நிம்மதி இல்லை” என்று வெளிப்படையாகவே பேசினார்.தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பிய ரஜினி, சில காலம் இருவரிடமும் பேசுவதை தவிர்த்து வந்தார். பின்னர் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யோசியுங்கள் என்று கூறி வந்தார்.

காரணம் திருமண உறவு மீது ரஜினிக்கு பெரிய மரியாதையும், மதிப்பும் இருந்தது. அதனால்தான் அவர் லதாவுடன் சின்ன உரசல்கூட இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனை மகள், மருமகனுக்கு எடுத்துச் சொல்லி இருவரும் சேர்ந்து வாழ பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்த இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தற்போது வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

அண்மையில் மகனின் பள்ளி விழாவில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டபோதே இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. ரஜினியின் தீவிர முயற்சியால் பிரிந்து வாழும் முடிவை இருவரும் கைவிட்டடிருப்பதாகவும், விவாகரத்து வழக்கை வாபஸ் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐஸ்வர்யா, தனுஷ் இருவருமே கூட்டாக ஒரு அறிக்கையை ஓரிரு தினங்களில் வெளியிட இருக்கிறார்கள். ஒரு தந்தையாக ரஜினி தன் கடமையை செய்திப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆதி புருஷ், போனில் பார்க்க வேண்டிய படமல்ல: ஓம் ராவத் காட்டம்ஆதி புருஷ், போனில் பார்க்க வேண்டிய ... குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)