சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த ஆண்டு 103 பாடல்கள் எழுதி பாடல் உலகில் செஞ்சுரி அடித்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் தொடங்கி இன்றுவரை இதுவரை யாரும் செய்திராத மிகப்பெரிய சாதனை இது. இந்த ஆண்டு 34 படங்களில் 103 பாடல்களை எழுதியிருக்கிறார். இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, நீதானே என் பொன் வசந்தம், டோனி, பில்லா 2, தாண்டவம், விண்மீன்கள், படம் பார்த்து கதை சொல், அம்புலி ஆகிய படங்களின் முழு பாடல்களையும் நா.முவே எழுதியுள்ளார். அந்த வகையிலும் சாதனை படைத்துள்ளார்.
அவர் எழுதிய 103 பாடல்களில் 40 பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக நீதானே என் பொன் வசந்தம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை, தாண்டவம், துப்பாக்கி, வழக்கு எண் 18/9, நண்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது 83 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அதுவும் சாதனையே.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நா.முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.