22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த சமந்தா, நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டதும் ஐதராபாத்திலேயே கணவருடன் தனி வீட்டில் குடியேறினார். ஆனால், அந்த வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பாகவே நாக சைதன்யா வெளியே போய்விட்டார் என்றார்கள். இருந்தாலும் சமந்தா இன்னும் அந்த வீட்டில்தான் இருந்து வருகிறார். ஐதராபாத்தை விட்டுச் செல்லும் எண்ணமில்லை என்றும் கடந்த வாரம் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஹோட்டல், அப்பா நாகார்ஜுனா வீடு என மாறி மாறி இருந்து வந்த நாக சைதன்யா தற்போது ஒரு புதிய அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றுள்ளாராம். அதோடு, ஐதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் நடிகை தபுவுக்குச் சொந்தமான வீட்டை வாங்கியுள்ளாராம் நாகசைதன்யா. அந்த வீட்டில் சில பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அந்த வேலைகள் முடிந்ததும் அந்த வீட்டிலேயே குடி புகுவார் எனத் தெரிகிறது.
அப்பா வழியில் நாக சைதன்யாவும் சில வருடங்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.