தேனில் பாலையும் சர்க்கரையையும் கலந்தால் எவ்வளவு தித்திப்பாக இருக்குமோ, அவ்வளவு தித்திப்பானது பாடகி பி.சுசீலாவின் குரல். தென்னிந்தியாவின் இசைக்குயில் இவர். அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமா இசையில் ஆதிகம் செலுத்திய பெண் குரல் இவருடையது.
இசைத்துறையில் இந்த குயில் பாடத் தொடங்கி 67 ஆண்டுகள் ஆகி உள்ளன. அதைப் பாராட்டுவதிலும் இந்தக் குயிலின் தேன் குரலை அங்கீகரிப்பதிலும் தினமலர் இணையதளம் பெருமை கொள்கிறது.
Advertisement
பயோடேட்டா
இயற்பெயர் | : | புலபாகா சுசீலா |
சினிமா பெயர் | : | பி. சுசீலா |
பிறப்பு | : | 13-நவம்பர்-1935 |
பிறந்த இடம் | : | விஜயநகரம் - ஆந்திர பிரதேசம் |
இசை துறையில் | : | 67 ஆண்டுகள் |
கணவர் | : | மோகன் ராவ் |
மகன் | : | ஜெயகிருஷ்ணன் |
பெற்றோர் | : | முகுந்தராவ் - சேஷாவதாரம் |
புனைப்பெயர் | : | "இசையரசி" |
விருதுகள் | : | - 2008 ஆம் ஆண்டு 'பத்மபூஷண்' விருது |
- 5 முறை தேசிய விருது (1969, 72, 77, 83 மற்றும் 84 ஆண்டுகள்) | ||
- 3 முறை தமிழக அரசின் கலைமாமணி விருது | ||
- 2 முறை கேரள அரசின் விருது | ||
- 7 முறை ஆந்திர அரசின் விருது |
Advertisement